Posts

Showing posts from April, 2023

சிதையாத சிற்பங்கள்

 #பயணங்கள்_முடிவதில்லை....(IV) #சிதையாத_சிற்பங்கள்.... உயிர்வலியை உணர்ந்து திரும்பும் முன்... ஜானகி அம்மாவின் குரல், சின்ன சின்ன வண்ணக்குயில், என கொஞ்சி கூவும் வரிகள்... மேனிக்குள் காற்று வந்து  மெல்லத்தான் ஆட கண்டேன், மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கைப்போல் ஓட கண்டேன்... இன்பத்தின் எல்லையோ இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே... இந்த காதல் எத்தனை விசித்திரமானது,  தினம் தேகம் தழுவும்  தென்றலின் தீண்டல்கூட,  புதிதாக உணர செய்யும்... பகல் பொழுதில் நினைவுகளோடும், இரவானால் கனவுகளோடும், பயணப்படும் காதலுக்கு, இரண்டிற்கும் இடைப்பட்ட அந்தி தொல்லை தருகிறதாம்...! எத்தனை முரண்களை  இந்த காதல் கொண்டிருக்கிறது...! என எண்ணும் போதே... பாலசுப்பிரமணியன் ஆஹா ஆஹா என ஆரம்பித்து,  காதலின் தீபமொன்று ஏற்றினாளே, என நெஞ்சில் ஏற்றிய தீபத்தின் ஒளியை உருவகிக்கிறார்.... என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே  பூவை அள்ளும்  புன்னகை மின்னுதே  கண்ணிலே  காந்தம் வைத்த  கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா.... முழுமையடையாத மனிதம்,  தன்னை அறிந்...

இதயரணங்கள்

 #பயணங்கள்_முடிவதில்லை....(III) #இதயரணங்கள்... கண்ணீரின் தடங்களை கழுவிவிட்டு, முகம் துடைத்தப்படி பயணம் தொடங்கிய நொடியில், பாலசுப்பிரமணியன் பாடி கொண்டிருக்கிறார்.... கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால், என  நீங்காத பாரம்  என் நெஞ்சோடு தான் நான் தேடும்  சுமைதாங்கி  நீயல்லவா நான் வாழும் நேரம்  உன் மார்போடுதான் நீ என்னைத் தாலாட்டும்  தாயல்லவா ஏதோ ஏதோ  ஆனந்த ராகம் உன்னால் தானே  உண்டானது கால் போன  பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே  மெய் சேர்த்த மாது எனும் வரிகளில், இந்த ஆணினம்,பெண்ணினம் என இரண்டுமே,வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்புகளை விட,  தன் உணர்வுகளை பகிரும், மனதின் பாரங்களை இறக்கிவைக்கும் சுமைதாங்கியான துணைகளையே தேடுகிறார்கள்.... ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ துணையை தவிர மற்றவர்களிடம் சொல்ல இயலாத பாரங்களோடு பயணிக்கிறார்கள்... அந்த பாரங்களை பரஸ்பரம் பகிர்ந்து ஒருவருக்கு மற்றொருவர் சுமைதாங்கியாகும் உறவுகளை தேடுகிறார்கள்... ஆனால் அதை ஆண் எளிதாக தாய்மையோடு ஒப்பிட்டுவிடுகிறான், பெண்களுக்கும் அதே தாய்மைதான் தேவைப்படுகிறது... ஆணுக்...

நினைவுகள் தொடர்கதை

 #பயணங்கள்_முடிவதில்லை...(II)  #நினைவுகள்_தொடர்கதை... கண்ணீர் துளிகளின் ஈரம் காய்வதற்குள், யேசுதாஸ் ஷைலஜாவும் நினைவுகளை சுகமாக மீட்ட தொடங்குகின்றனர்,  ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே.. என தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்  சேரும் நாள் வேண்டும்,,,, இந்த வரிகளில் தான்... பெண்மையின் தேவை என்ன...?  இந்த உலகில் இந்த கேள்விக்கு  பெண்களால் கூட விடைதர முடியாது... புடவையா, நகையா,பணமா,ஆடம்பரமா உணவா, அன்பா, இதில் எதிலுமே அவள் நிறைவு கொள்வதில்லை... இது எதுவுமே அவள் தேவையாக இருந்ததேயில்லை... அன்பையும் சேர்த்தே கூறுகிறேன்...இந்த உலகில் பெண்கள் வெளிபடுத்தும் அன்பைவிட ஆண்கள் அன்புகாட்டுவதில் கூட குறைவுதான்... அவள் தேவை என்ன...? பெண்மையை உணர்வதே அவள் தேவை... முந்தைய பதிவில்,ஒரு ஆண் தன்னிடமும் பெண்மையின் அத்தனை இயல்புகளையும் தாய்மை வரை உணர்ந்த பிறகே முழுமையடைகிறான் என கூறியிருந்தேன்...  அந்த பெண்மையை உணர்வதே அவள் விரும்பும் துணைக்கு தேவையான ஒன்று... அந்த தேவைகள் தீராத நேரத்தில் தீர்க்கின்ற துணை வேண்டும் என்கிறாள்...! அப்படிப்பட்ட துணையுடன் இணையும் நாளை எதிர்பார்...

பயணங்கள் முடிவதில்லை

 #பயணங்கள்_முடிவதில்லை... வெகுநாட்களுக்கு பிறகு, நேற்றைய இரவில் ஒரு தொலைதூர பயணம்.... நிலவின் அழகை ரசித்தப்படி, மௌனங்களின் சாலை, இளையராஜாவின் துணையோடு வாகன நெருக்கடி இல்லாமல் நெடுஞ்சாலையில் பயணம்  செய்யும் ஆசை உண்டு... நேற்றிரவே அப்படிப்பட்ட வாய்ப்பமைந்தது.... விநாயகனே வினை தீர்ப்பவனே எனும் சீர்காழியின் குரலில் தொடங்கி மகிழ்வூந்தை இயக்குகிறார் ஓட்டுநர்...  சிவமயமாக தெரிகிறதே என பாலசுப்பிரமணியனும், மாணிக்கவல்லி ஆடுகிறாள் என யேசுதாஸூம், ஆயர்பாடி மாளிகையில் என்று கண்ணனுக்கும், சங்கரனின் மைந்தனுக்கு தாலாட்டு என முருகனுக்கும், தன் காந்த குரலால் தாலாட்டுகிறார் பாலசுப்பிரமணியன்.... அடுத்து வளையோசை கலகல கலவென என கவிதைகள் படித்திட தென்றல் காற்றை வீச செய்து, கண்ணிற்கு தூக்கத்தையும், மனதிற்கு நினைவுகளையும் மீட்டுதர தயாராகிறார்... ஆனால் நினைவுகள் நிஜங்களாக மாறியவர்களுக்கு தூக்கம் தரும் அருமருந்து பாடல்தான்... ஆனால் நினைவுகள் நினைவுகளாகவே தொடர்பவர்களுக்கு தூக்கம் தொலையும்.... லதா மங்கேஷ்கரின் குரலில்..., உன்னை காணா துருகும் நொடி நேரம்  பல மாதம் வருடம் என மாறும்... என்ற வரிகளை உரு...

Politics

 #காலம்_வெல்லும்_கலைஞர் அரசியல் பதிவுகளை, சமீபகாலமாக தவிர்த்து விடுகிறேன்.... காலையில் ஒரு நண்பர் வேண்டிக்கேட்டதற்காக.... பேரறிவாளன் விடுதலையையும்,  திமுக தலைவரை சந்தித்ததையும், பற்றி எதையும் எழுதும் மனநிலை இல்லை.... ஒரு கொலை மன்னிக்கக்கூடாதது தான்... அவர்கள் குற்றமற்றவர்கள் என கூறுவதிலும் எனக்கு உடன்பாடில்லை.... தகப்பனை இழந்த குழந்தைகளின் வலி கொடிதுதான்... இது எல்லோருக்கும் பொருந்தும் என்றால், பேரறிவாளன் விடுதலையும் தவறு.... மரண தண்டனை ரத்து செய்த போதே, மறுசீராய்வு மனு தாக்கல் செய்து கொன்றிருக்கலாமே...!  அல்லது சிறைத்தண்டனையாவது, ஆயுள் காலத்தை கணக்கிட்டு வாதாடி பெற்றிருக்கலாமே.... உச்சநீதிமன்றம் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியதே, அப்போதாவது எதிர்த்தார்களா...? காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சிகள் தேசிய அரசியலில் ஆதாயம் தேட பயன்படுத்தப்பட்ட ஒர் உபகரணமாகவே ஏழு உயிர்கள்...  தமிழீழ விடுதலை புலிகள் என்ற அமைப்பே 1976ல் தான் பிரபாகரனால் தோற்றுவிக்கப்படுகிறது. அதற்கு முன் ஈழத்தில் பல அமைப்புக்கள் இலங்கை தமிழரின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளது. நெருக்கடி நி...

அரசியல்

 #DravidianModel.... All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  - ன், தகவல் தொழில்நுட்ப அணியினர் நேற்றைய ஒன்றிய பிரதமரை வரவேற்ற நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரை தாண்டி, எதிர்க்கட்சி தலைவர் Edappadi K. Palaniswami அவர்களை, இந்திய ஒன்றிய பிரதமர் தட்டிக்கொடுத்த நிகழ்வின் காணொலியை பகிர்ந்து, பரப்பி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.... மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று தனித்திராவிட நாடு கொள்கையில், சீனப்போரில் தேச பாதுகாப்புக்காக சமரசம் செய்த அண்ணா,  மாநில சுயாட்சிக்காக,மாநில உரிமைக்காக, ஒன்றிய அரசுடன் சமரசமில்லாமல் எதிர்ப்புக்குரல் எழுப்பித்தான் அண்ணாவுக்கு பழக்கம். அண்ணா தொடங்கிய DMK - Dravida Munnetra Kazhagam - ன் பழக்கமும் அதுதான்.... அண்ணாவின் கொள்கைகளுக்கு நேரெதிராய் செயல்படும், ஒன்றிய அரசுக்கு அடிமை சேவகம் செய்பவர்களை, தட்டிக்கொடுக்கலாம், கட்டித்தழுவலாம் தவறில்லையே,  அகில இந்தியத்திற்கும், அண்ணாவிற்கும், எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை...  அண்ணாவும், அவர் எழுப்பிய மாநில சுயாட்சி கொள்கைகளும்தான், அகில இந்தியத்தையே ...

ADMK & MGR

 #நாடகங்களும்_வேடங்களும்... All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  இதன் வரலாறே நம்பிக்கை துரோகத்தில் தொடங்கியதுதான்... முதலில் தனி திராவிட நாடு கோரிக்கையும், தேசத்திற்கு அச்சுறுத்தல் வந்த போது,மாநில சுயாட்சி என்ற முழக்கத்தையும் தாரக மந்திரமாக கொண்ட, பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயருக்கு முன்னால் இந்திரா காந்திக்கு பயந்து அகில இந்திய(All India) என்று மாநில சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கைகளுக்கு துரோகம் செய்து உருவான இயக்கம். 1949 திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து DMK - Dravida Munnetra Kazhagam  என்ற அமைப்பை உருவாக்கும் போது,1936 - 47 வரை 11 ஆண்டுகள் MGR யார் என்றே தமிழக மக்கள் அறிந்திருக்கவில்லை.  ராஜகுமாரி,மருதநாட்டு இளவரசி, என கலைஞர் தொடங்கி, கண்ணதாசன், AVP.ஆசைதம்பி, என திராவிட இயக்க கதையாசிரியர்களின் திரைப்படங்களே MGRக்கு அடையாளம் தந்தது.  ( இந்த திரைப்படங்கள் இல்லையென்றால்... MGR யார்?) MGR-ஐ புகழின் உச்சியில் நிறுத்தியது திமுக எழுத்தாளர்களின் கதைகளும், வசனங்களும் என்று ஒரு ஊடகமும் பேசாது, ஆனால் திமுகவின் வெற்றிக்கு MGR-ன் புகழ்தான் காரணம் என்ற நஞ்ச...

India

 #இந்தியா #அகன்ற_பாரதமா...? #ஒன்றியமா...? இந்தியா என்பது நாடே அல்ல, அது பல நாடுகளை ஒருங்கிணைந்த துணைகண்டம்... இந்தியா என்ற ஒரே நாடும், மாகாணங்களுமே ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது.... சங்கிகளுக்கு சுளீர் என்று கோபம் வரலாம், பல மாநிலங்களை தெரியும், மாகாணங்களை தெரியும், பல நாடுகளா இந்தியாவில் என தோன்றும்,காரணம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.... அவர்கள் நம்பும், ராமாயண ராமனின் நாடு,  அயோத்தியை தலைமையிடமாக கொண்ட #கோசலநாடு. சீதையின் நாடு மிதிலையை தலைமையிடமாக கொண்ட #விதேகநாடு...  இவைகள் நாடுகளா, இல்லை ஊராட்சிகளா...? இந்த நாடுகள்  எல்லாம் எங்கிருக்கிறது.?  அகன்ற பாரத பேரரசின் வெளியிலா...? தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்ட சேரநாடும், பூம்புகாரை தலைமையிடமாக கொண்டு சோழநாடும், மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடும், இருந்தது... அதன் பிறகான அதிகாரத்தை விரிவாக்க ஏற்பட்ட போர்களாலும், அதன் பிறகான படையெடுப்புகளாலும், பல்லவர்கள்,சாளுக்கியர்கள், நாயக்கர்கள்,முகலாயர்கள் என ஆட்சி மாற்றம் கண்டு, கடைசியில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் போரில் தோற்றும்,...

Periyar

 இது பெரியார் தேசம்  இந்த வார்த்தைகளுக்குத்தான் எத்தனை எதிர்ப்பு....! வளர்ப்பு மகளையே மணந்தவர், தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார்,  திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலமென்றார், சிலப்பதிகாரத்தை விமர்சித்தார், இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமென்றார்,  என்ற குற்றச்சாட்டுகளும், சாதியை ஒழித்தார்,  பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தார், விதவை திருமணத்தை ஆதரித்தார், மதுக்கடைகளை ஒழித்தார் என பொய் பரப்பி, பெரியாரை கொண்டாட செய்கிறார்கள் திராவிடம் பேசுபவர்கள்.... விதவை திருமணச்சட்டம், சதி ஒழிப்பு இவை ஈஸ்வர சந்திர வித்யாசாகர், மோகன்ராய் போன்றவர்களால் கொண்டுவரப்பட்டது, அந்த சமயத்தில் பெரியார் பிறந்திருக்கவேயில்லை.... தமிழ் மொழியில் திராவிடம் என்ற வார்த்தையே இல்லை, திராவிடம் என்பது ஏமாற்று வேலை... தமிழர்கள் ஆள வேண்டும் என்று சாதியை குடி என அடையாளப்படுத்தி, நாம் தமிழர் என்ற அரசியல் கட்சி, சீமான் தலைமையில் தொடர்ந்து பரப்புகிறது.. பெண் தொடர்பான குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் பெரியாரும் விமர்சிக்கப்படுவார், திருமணம் தாண்டிய உறவு (EMA) நிகழ்வுகள் பெண் சம்பந்தப்பட்டால், கற்பு,ஒழுக...

தீபாவளி

 #தீபாவளி_2022 நரகாசூரன் யார்..?  (நரன் - மனிதன்) வராக அவதாரம்(பன்றி) - பூமா தேவிக்கும் பிறந்தவன்.. மனு தர்மப்படி, பெண், காம எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாதவள்.,அது விலங்குகள் என்றாலும் கூட , என்று எழுதி வைத்ததை  எல்லா புராணங்களிலும், கடவுள் அவதாரம் எடுத்தார் என்று இறை நம்பிக்கையை வைத்து, பெண்ணை காம பொருளாக நம்ப வைத்தார்கள். கூர்மம் - மோகினி, வராகம் - பூமா தேவி, பரசுராமர் - ரேணுகா தேவி, ராமர் - தசரதனின் மனைவிகள் அஸ்வமேத யாகம் எனும் பெயரில் குதிரைகளோடு....  அகலிகை   கிருஷ்ணர் - மச்சகந்தி, அம்பிகா, அம்பாலிகா, பணிப்பெண், என ஆயிரம் கதை சொல்லி, பெண் காமத்திற்கானவள்.. என எழுதி நம்ப செய்தார்கள்...  பெண்களையும், சூத்திரர்களையும் சுற்றி மட்டுமே இந்த அவதார புராணம், வேதம் எல்லாம் எழுதப்பட்டது. சூத்திரர்களை மட்டுமே மனிதன்,அசுரன் என்று புராணங்கள் அடையாளம் செய்தன. மற்றவர்களை தேவர்கள்,ரிஷிகள், முனிவர்கள், என்று அடையாளம் செய்தனர். மனிதர்களை துன்பப்படுத்தியதர்க்காக எந்த அசுரனையும், விஷ்ணு அவதாரம் எடுத்து கொல்ல வில்லை.  தேவர்களை,முனிவர்களை துன்பப்படுத்தினால் அவதாரம...

GD

 சாதி ஒழிய, முதலில் பெண்சாதி என்ற எண்ணம் ஒழிய வேண்டும்..  ஆணுக்கு பெண் அடிமை என்ற எண்ணம் ஒழியாமல், ஆண்மை, பெண்மை என்ற வார்த்தைகள் ஒழியாமல், சாதிஒழிப்பு சாத்தியமில்லை. வாழ்க்கை துணையையே சமமாக கருதாத ஒருவனால் மற்றவனை சமமாக கருத முடியாது.

புதிர்

 நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒருவர், பெரியார் வளர்ப்பு மகளை மணந்தார்...? அது திராவிட கலாச்சாரத்துக்கு ஒத்து வரும், தமிழர் கலாச்சாரத்துக்கு ஒத்துவராது என்றார்... #கலாச்சாரம் என்ற வார்த்தை தமிழா...?  கல் + #ஆச்சாரம்,  பிராமண அடிமைகள் தான் தமிழ்தேசியம் பேசுவோர் என நிருபித்துக்கொண்டதற்கு நன்றி.  தமிழர் வாழ்வியலில் திருமணமுறை கிடையாது. அகமணமுறைதான் நடைமுறையில் இருந்தது.  யாயும் ஞாயும் யாராகியரோ  எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்  யானும் நீயும் எவ்வழி அறிதும்  செம்புலப் பெயல்நீர் போல  அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’ இந்த வரிகளின் அர்த்தம் தெரியுமா..?  தாழி என்பது அடக்கம் செய்யும் பானை,  பெண் தன் உணர்வுகளை உணர்ச்சிகளை அடக்கம் செய்ய பயன்பட்டதே தாழி/தாலி.  அது முதலில் தாளி எனும் பனை ஓலை கொண்டு கட்டப்பட்டது.  அதன் பிறகு தான் பொம்பளை பிள்ளையா அடக்க, ஒடுக்கமா இரு என்ற வார்த்தைகள் பிறந்தது. பெண்களை,பாலின ஆதிக்கம் கொண்டு  அடக்கியும், ஒடுக்கியும் வாழ்ந்திட செய்தது தான்,உங்கள் கலாச்சாரம். மணியம்மையை பெரியார் தத்தெடுத்து வளர்த்ததாகவ...

சித்திரை முதல்நாள்

 #சித்திரை_தமிழ்_புத்தாண்டா...? #மலையாள_புத்தாண்டா...? #தெலுங்கு_கன்னட_யுகாதி_புத்தாண்டா..? தமிழ் புத்தாண்டை வாழ்த்துவதை விட விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் ஏன்...? கோமணம் கட்டிய ஊரில் அம்மணமாய் திரிபவனை மூடன் என்பது பழமொழி.  சரி,  அம்மணமாய் திரிந்த ஊரில் கோவணங் கட்டியவனை எப்படி பார்ப்பார்கள்...? நாகரீகம் தோன்றிய பிறகு ஆடைவந்தது, ஆடை வந்த பிறகு அம்மணமாய் திரிவது அறிவின்மை தான்.  ஆனால் முதல் முதலில் ஆடை அணிந்த ஒருவனையும், இந்த சமூகம் மூடனாய்த்தான் பார்த்திருக்கும்...  இப்படித்தான் மாற்றி அமைத்தார்கள் அத்தனையும்... ஒவ்வொரு மொழியும்,அது தோன்றிய வரலாற்றையும் கணக்கில் கொண்டு காலக்கணக்கீடு செய்ய அம்மொழி மக்களை ஏமாற்ற வருடப்பிறப்பு கணக்கிட முடியும். எப்போது தோன்றியதென தெரியாத, கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி, உலகத்திற்கு நாகரீத்தை கற்றுத்தந்த தமிழ்மொழியின் காலத்தை எவன் கணக்கிட முடியும்...? வைகறை, காலை, நண்பகல், எற்பாடு,  மாலை, யாமம் என ஒரு நாளையே சிறுபொழுதுகளாக்கி,  குளிர்காலம்,முன்பனிக்காலம், பின்பனிக்காலம்,இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்,கார...

B.R.Ambedkar

 #Birthday_Anniversary #Father_of_Indian_Republic... என்னை நீ உன் அடிமையாக எண்ணும் போது, உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடுவது என் கடமை... என்னை, கடவுளாக்கி வழிபடாதே., தோற்றுவிடுவாய், ஆயுதமாக்கி போராடு.,                                                       - அம்பேத்கர் யார் இந்த அம்பேத்கர்...? அம்பேத்கர் பற்றிய சமூகத்தின் பார்வை என்ன...? தலித்(Dalit) என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன...? தலித் என்பது தாழ்த்தப்பட்டவர்களை குறிக்கும் வார்த்தை,  அந்த தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் அம்பேத்கர்.... இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,  நிறைய படித்தவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர்,  அந்த அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு,  இட ஒதுக்கீடு வாங்கி தந்த சாதிய தலைவராகத்தான் அம்பேத்கர் பற்றிய வெகுஜன, சாதியவாதிகளின் எண்ணம்.  ஆனால் உண்மையென்ன,  யார் தாழ்த்தப்பட்டவர்கள்...? அப்படி ஒரு வார்த்தை...,  வெகுசுலபம...