Malegaze....(VI)
வணிகம் தோன்றும் முன், களவு எனும் திருட்டு, வழிப்பறி தொழிலுக்கு அவசியமில்லை... களவு என்பது காதலில் துணையொடு இணைந்திருந்து மகிழ்ந்திருப்பது. மலையில் சேயர்களாகி வேட்டையாடி, ஆடை அறிமுகமாகும் முன் துணையோடு இணைந்திருந்து மகிழ்ந்திருந்தார்கள்... காடுகளில் ஆயர்களாகி/இடையர்களாகி கால்நடைகளோடு மேய்த்தலுக்கு நாடோடி வாழ்க்கை முறையில், ஆடை அறிமுகமாகிய பின், துணையோடு இணைந்து மகிழ்ந்திருக்க காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அதனால் நாடோடி வாழ்க்கையில் கள் உண்டு களித்திருந்தார்கள்... பாலை என்பது கோடைகால, மழையற்ற தன்மையில் மலையும், காடுகளும் அடையும் பசுமை மாற்றமே. நிரைகளையும், நாடோடி வாழ்க்கையும் கொண்ட ஆயர்கள்/இடையர்கள், மேய்த்தல் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்கு பயணப்பட, ஒரே துணை என்ற நிலையை கடந்து, பிரிதலுக்கு பழக்கப்பட்டார்கள்... கள் - பனை குடும்ப மரங்களிலிருந்து இறங்குவது. (களிப்பு - மகிழ்ச்சி ) மள் - பிற தாவரங்களிலிருந்து இறங்குவது... மள் + ஈகை பொருள் :- மளீகை பொருள் என்பதே மளிகை பொருளாகியது.... மள் + ஈகை பூ - மளீகை பூ என்பதே மல்லிகை பூவாகியது... ம...